வரும் வியாழக்கிழமை (ஜூன் 19) 10 மில்லியன் வெள்ளிக்கான ‘டோட்டோ’ அதிர்ஷ்ட குலுக்கல் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து மூன்று டோட்டோ அதிர்ஷ்ட குலுக்கல்களில் யாரும் வெற்றி பெறாததால் தற்போது பரிசுத் தொகை 10 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 9ஆம் தேதி அதிர்ஷ்ட குலுக்கலில் குரூப் 1 பரிசான கிட்டத்தட்ட 1.3 மில்லியன் வெள்ளியை யாரும் வெல்லவில்லை.
அதன்பின்னர் ஜூன் 12ஆம் தேதியின் அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு 2.9 மில்லியன் வெள்ளியாக மாற்றப்பட்டது. அதற்கும் குரூப் 1 வெற்றியாளர்கள் இல்லை.
இந்நிலையில் ஜூன் 16ஆம் தேதியின் அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு 5.6 மில்லியன் வெள்ளியாக மாற்றப்பட்டது. ஆனால் அதற்கும் குரூப் 1 வெற்றியாளர்கள் இல்லை.
அதனால் ஜூன் 19ஆம் தேதியின் அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு 10 மில்லியன் வெள்ளியாக அதிகரித்துள்ளது.
இதற்கு முன்னர் ஜூன் 5ஆம் தேதி நடந்த அதிர்ஷ்ட குலுக்கலில் 1.2 மில்லியன் வெள்ளியை ஒரு வெற்றியாளர் பெற்றார்.
2025ஆம் ஆண்டில் ஆறாவது முறையாக 10 மில்லியன் வெள்ளிக்கான போட்டி நடக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
ஜூன் 19ஆம் தேதிக்கான அதிர்ஷ்ட குலுக்கல் இரவு 9.30 மணிக்கு நடக்கும். 9 மணியுடன் அதிர்ஷ்ட குலுக்கல் சீட்டுகளின் விற்பனை நிறுத்தப்படும்.