கடந்த வாரம் 163 பேர் டெங்கியால் பாதிப்பு

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 163 பேர் டெங்கி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது. 

ஜூன் 4க்கும் ஜூன் 10க்கும் இடைப்பட்ட காலத்தில் அந்த எண்ணிக்கை பதிவானது.

அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 50 விழுக்காடு புதிதாக தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவ்வாரத்தில் 111 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டனர். 

தேசியச் சுற்றுப்புற அமைப்பின் இணையதளத்தில் புதன்கிழமை நிலவரப்படி 31 டெங்கி குழுமங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 

அவற்றில் 3 சிவப்பு நிறங்களில் உள்ளன. சிவப்பு நிறத்தில் உள்ள குழுமங்களில் 10 அல்லது அதற்கு அதிகமான டெங்கிச் சம்பவங்கள் பாதிவானதைக் குறிக்கிறது.

டெங்கித்தொற்று ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவுகிறது. அவை நீர் தேங்கியுள்ள இடங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. 

இவ்வாண்டில் இதுவரை 3,595 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதைத் தடுக்க நீர் தேங்காமல் வீட்டை தூய்மமையாக வைத்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் அமைப்பு கேட்டுக்கொண்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!