போலி ‘ஏர்போட்’ சாதன விற்பனை தொடர்பில் இருவர் கைது

'ஆப்பிள்' நிறுவனத்தின் பிரபலமான சாதனங்களில் ஒன்றான 'ஏர்போட்’ சாதனத்தை மோசடி செய்து விற்றதாக சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலிஸ் கிறிஸ்மஸ் நாளன்று கொடுத்த தகவல்படி, கடந்த சனிக்கிழமையும் திங்கட்கிழமையும் இணைய விளம்பரத்தின் வழி இந்த போலி ‘ஏர்போட்’ சாதனங்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் புகார் கொடுத்திருந்தனர்.

பிடோக் போலிஸ் பிரிவின் தகவல்படி, இரு ஆடவர்கள் இதன் தொடர்பில் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவருக்கு 23 வயது, மற்றொருவருக்கு 19 வயது.

இந்த மோசடி சம்பவம் குறித்த போலிஸ் விசாரணை தொடர்கிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஒருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

அப்படி இணையத்தில் விற்கப்படும் பொருள் வழக்கத்திற்கு மாறாக மிகக் குறைந்த விலையில் விளம்பரப்படுத்தப்பட்டால், எச்சரிக்கையுடன் செயல்பட பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!