கொசுவை ஒழிக்க புதிய ஆய்வு டெங்கியைக் கட்டுப்படுத்தும்

கொசுவை ஒழிக்க புதிய ஆய்வு டெங்கியைக் கட்டுப்படுத்தும்

1 mins read

புதிய ஆய்வு ஒன்றுக்காக அதிக அளவில் கொசுக்கள் பெருக்கப்படவுள்ளன. இதனால் அறிவியலாளர் கள் டெங்கி மற்றும் கொசுவினால் ஏற்படும் நோய்களைக் கட்டுப் படுத்தும் வழிமுறைகளை ஆராய்வது இலகுவாக்கப்படும். இந்த ஆய்வுக்கு ஆண் கொசுக்கள் பெருமளவில் தேவை. வோல்பாக்கியா எனும் பாக்டீரியாவை ஆண் கொசுக் களுக்கு ஏற்றுவார்கள். ஆண் கொசுக்கள் மனிதர்கள் ரத்தத்தைக் குடிக்காது. பிறகு இந்த ஆண் கொசுக்களை வெளியில் விடுவார்கள். அது பெண் கொசுவுடன் இனப் பெருக் கத்தில் ஈடுபடும்போது, அந்த பாக்டீரியா முட்டைகளில் இருந்து கொசு உருவாவதைத் தடுக்கும். இதன்மூலம் கொசுப் பெருக்கம் தடுக்கப்படுகிறது. இந்த வோல்பாக்கியா ஆய்வு 2016ஆம் ஆண்டிலிருந்து நடத்தப் பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் அதிக ளவிலான கொசுக்கள் வீவக அடுக்குமாடிகளின் உயர்மாடிகள் குறிப்பிட்ட கால இடையில் வெளிவி டப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இதில் போதிய அளவு ஆண் கொசுக்கள் கிடைப்பதுதான் சிரம மாக உள்ளது. எனினும், தேசிய சுற்றுப்புற வாரியமும் ஓரினோ டெக்னாலஜி அண்ட் வெரிலி எனும் புதிய உள்ளூர் புதிய நிறுவனமும் இணைந்து ஈடுபட் டுள்ள புதிய முயற்சி, இந்த ஆய்வை மேலும் பலனுள்ளதாக்கியுள்ளது.