சிங்கப்பூரில் பல்வேறு பகுதிகளில் நேற்று கனத்த மழை பெய்ததைத் தொடர்ந்து அங் மோ கியோ வட்டாரத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. வெள்ளம் திடீரென ஏற் படலாம் என்று பொதுப் பய னீட்டுக் கழகம் மாலை 5.47 மணிக்கு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எச்சரித்தது. வெள்ளம் பின்னர் வடிந்ததாக கழகம் 5.55 மணிக்கு தெரிவித்தது. வெள்ள நீர்மட்டம் கணுக்கால் அளவுக்கு உயர்ந்ததாக காணொளிகள் சிலவற்றில் தென்பட்டது.
அங் மோ கியோவில் திடீர் வெள்ளம்
1 mins read

