23 தொடக்கப் பள்ளிகளுக்கு அளவுக்கு அதிகமான விண்ணப்பங்கள்

தொடக்கநிலை 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான 2A கட்டத்தின் இரண்டாம் நாளுக்குள், மொத்தம் 23 பள்ளிகள் அளவுக்கு அதிகமான விண்ணப்பங்களைப் பெற்றன.

தெம்பனிசில் உள்ள கொங்ஷாங் தொடக்கப் பள்ளிக்கு ஆக அதிகமான விண்ணப்பங்கள் வந்தன. அந்தப் பள்ளியில் 46 இடங்களுக்கு 143 விண்ணப்பங்கள் வந்தன.

புக்கிட் பாத்தோக்கில் உள்ள பிரின்செஸ் எலிசபெத் தொடக்கப் பள்ளியில் எஞ்சியிருந்த 53 இடங்களுக்கு 84 விண்ணப்பங்கள் வந்தன.

சிராங்கூனில் உள்ள ரோசைத் தொடக்கப்பள்ளி, மீதமிருந்த 75 இடங்களுக்கு 115 விண்ணப்பங்களைப் பெற்றது.

2A கட்டம், இதற்கு முன்னர் பள்ளியில் பயின்ற பெற்றோர் அல்லது சகோதர, சகோதரிகளைக் கொண்டுள்ள பிள்ளைகளுக்கானது. பள்ளியில் ஆலோசனை அல்லது நிர்வாகக் குழு உறுப்பினராக இருக்கும் பெற்றோரைக் கொண்டுள்ள பிள்ளைகளுக்கும் அது பொருந்தும்.

கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளைச் சேர்ந்த பிள்ளைகளும் இந்தக் கட்டத்தின்கீழ் பதிவுசெய்யலாம்.

2A கட்டத்திற்கான பதிவு சென்ற வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!