சாங்கி விமான நிலையக் குழுமம் 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இரண்டு பெரிய விமானப் பாலங்களையும் போக்குவரத்து மேம்பாலங்கள் இரண்டையும் வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம் அப்பாலங்களின் ஆயுட்காலத்தை 30 முதல் 40 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் எனக் கூறப்பட்டது.
வலுசேர்க்கும் பணிகளின்கீழ், பாலங்களில் பயன்பாட்டில் இருக்கும் ‘பேரிங்’ எனப்படும் உராய்வைத் தவிர்க்க உதவும் சாதனங்கள் மாற்றப்படும்.
இப்பாலங்களில் இத்தகைய பணி மேற்கொள்ளப்படுவது இதுவே முதல்முறை என்று குழுமம் கூறியது.
வலுசேர்ப்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் நான்கு பாலங்களில் மூன்று, சாங்கி விமான நிலையம் திறக்கப்பட்ட ஆண்டான 1981இல் கட்டப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
பாலங்கள் ஒவ்வொன்றாக வலுசேர்ப்புப் பணிகளுக்காக மூடப்படும்; அப்போது வாகனங்கள் மாற்று வழிகளில் திருப்பி விடப்படும் என்று சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்தது.