‘ஐராசை’ ஏமாற்ற முயன்ற மாதிற்கு நான்கு மாதச் சிறை

சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தை (ஐராஸ்) ஏமாற்றி, வேலை ஆத­ர­வுத் திட்­டத்­தின்கீழ் (ஜேஎஸ்எஸ்) $8,500க்கும் மேல் மானியங்களைப் பெற முயற்சி செய்த மலேசிய மாதிற்கு நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை திங்கட்கிழமை விதிக்கப்பட்டது.

வோங் லாய் கூக், 48, என்ற அம்மாது, கடன் வசூல் செய்யும் ஒரு நிறுவனத்தின் மனிதவள மேலாளராகப் பணிபுரிந்தார்.

அம்மாது தன்மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

தண்டணை விதிக்கப்படுமுன் அவர்மீது சுமத்தப்பட்ட மற்ற ஆறு குற்றச்சாட்டுகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அவர் இந்தக் குற்றத்தை 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கும் ஏப்ரல் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் புரிந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இக்குற்றத்தைப் புரிந்தபோது, அவர் தனது அப்போதைய கணவரின் நிறுவனமான ‘டபிள் ஏஸ் அசோசியேட்சில்’ பணிபுரிந்ததாகக் கூறப்பட்டது.

கொவிட்-19 தொற்றுப் பரவல் காலத்தில் உள்ளூர் தொழிலாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள முதலாளிகளுக்கு ஊதிய ஆதரவு வழங்குவதற்காக வேலை ஆதரவுத் திட்டம் தொடங்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!