பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 412 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
அவர்கள், முதலீடு,, இணையவழி வணிகம், ஆள்மாறாட்டம், வேலை, இணையக் காதல் போன்றவை தொடர்பான 1,600க்கும் மேற்பட்ட மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த மோசடிகளில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் $10 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை இழந்ததாகக் கூறப்பட்டது.
இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதி வரை மேற்கொண்ட நடிவடிக்கைகள் மூலம், மோசடிகளில் ஈடுபட்டதன் சந்தேகத்தின்பேரில் 15 முதல் 78 வயதுக்குட்பட்ட 295 ஆண்களிடமும்117 பெண்களிடமும் விசாரித்து வருவதாகக் காவல்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

