பாசிர் ரிஸில் பேருந்து மோதி சைக்கிளோட்டி மரணம்

பாசிர் ரிஸில் பேருந்து மோதி சைக்கிளோட்டி மரணம்

1 mins read
18d12d33-d603-4831-9713-45bf968a784a
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பாசிர் ரிஸில் திங்கட்கிழமை (ஏப்ரல் 10) காலை கோ அஹெட் பேருந்து மோதி 65 வயது சைக்கிளோட்டி மாண்டார்.

விபத்தில் மாண்டவர் துப்புரவு ஊழியர். அவர் வேலைக்குச் சென்றபோது விபத்தில் சிக்கியதாகக் கூறப்பட்டது.

பாசிர் ரிஸ் டிரைவ் 3 மற்றும் பாசிர் ரிஸ் சென்ட்ரல் சந்திப்பில் அவ்விபத்து நிகழ்ந்தது.

விபத்தில் சிக்கிய ஆடவர் உடனடியாக சாங்கி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

விபத்து தொடர்பாக ஏப்ரல் 10ஆம் தேதி காலை 7:20 மணிக்கு தங்களுக்கு தகவல் வந்ததாகக் காவல்துறை குறிப்பிட்டது.

விபத்து தொடர்பான விசாரணையில் 45 வயது பேருந்து ஓட்டுநர் உதவி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்