காரில் இறந்து கிடந்த 65 வயது முதியவர்

ஈசூனில் உள்ள கார்ப்பேட்டையில் நிறுத்தி வைக்கப்பட்ட காரில் 65 வயது முதியவர் ஒருவர் புதன்கிழமை (ஏப்ரல் 12) இறந்துகிடந்தார்.
அவர் இறந்து ஐந்து மணி நேரமாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இச்சம்பவம் பற்றி மாலை 6.04 மணிக்குத் தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் ஈசூன் ஸ்திரீட் 21, புளோக் 233க்குச் சென்றனர்.

அப்போது அவரைச் சோதித்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர்  அவர் இறந்துவிட்டதை உறுதி செய்தனர். முதற்கட்ட விசாரணையில் அவரது மரணத்தில் சூது இருக்காது என நம்பப்படுகிறது.

காரில் ஒருவர் அசைவற்றுக் கிடந்ததைத் கண்டு வழிப்போக்கர் ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டதாக ஷின் மின் தகவல் தெரிவித்தது.

கார் கதவு திறந்த நிலையில் இருந்தது. அந்த வழிப்போக்கர் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!