விமானத்தில் திருட்டு: ஒரே இடத்தில் இருந்த காவலர் பிடியில் சிக்கிய வர்த்தகர்

தான் பயணம் செய்துகொண்டிருந்த விமானத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரும் இருப்பதை உணராத வர்த்தகரும் சீன நாட்டவருமான 45 வயது யி ஹுவேய்சுன், இன்னொரு பயணியின் பையை எடுத்தார்.

பையை எடுத்தது தொடர்பில் கம்போடிய ஏர்வேஸ் விமானத்தில் இருந்த உதவிக் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) லீ ஜுன் லோங், யியை விசாரித்தபோது அந்தப் பை தன்னுடையது என்று யி பதிலளித்தார்.

அதன் பின்னர், ஏஎஸ்பி லீ பையை உயரத் தூக்கிக் காட்டியவாறு அது யாருக்குச் சொந்தம் என்று கேட்டார்.

பையின் உரிமையாளர் உடனே எழுந்து அந்தப் பை தன்னுடையது என்று கூறினார்.

அதையடுத்து, சாங்கி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் யி கைது செய்யப்பட்டார்.

திருடிய குற்றச்சாட்டை ஜனவரி 30ஆம் தேதியன்று ஒப்புக்கொண்டதை அடுத்து, யிக்கு ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

விமானப் பயணத்தின்போது நடந்த திருட்டு குறித்து இவ்வாண்டு தொடங்கி ஜனவரியில் செய்தி வெளியிடப்பட்டுள்ள இரண்டாவது சம்பவம் இது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!