கொதிக்கும் எண்ணெய்யை சகோதரர் மீது ஊற்றிய மாதிற்குச் சிறை

அண்ணன் படுக்கையறையில் உறங்கிக்கொண்டிருந்தபோது அவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றினார் ஒரு மாது.

அதன் காரணமாக அண்ணனுக்கு கழுத்திலும் முதுகிலும் காயங்கள் ஏற்பட்டன.

அந்த 25 வயது ஆடவர் குணமடைந்துள்ளார். அவரைத் தாக்கிய 21 வயது நொர்ஜஹான் அப்துல் கரிமுக்கு ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் அவ்வாறு செயல்பட்டதற்கான காரணத்தை நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கவில்லை. இருப்பினும் சம்பவம் நடந்தபோது அவர் மனநிலையில் பாதிப்பு எதுவுமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, அந்த மாதின் தாயார் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். அதன் பிறகு, நொர்ஜஹான் கைதுசெய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்டவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அவருக்கு 2023ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதிவரை மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!