உரிமமற்ற வேலைவாய்ப்பு முகவை நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற் றத்திற்காக 45 வயது ஆடவர் ஒருவருக்கு நேற்று நீதிமன்றத்தில் $30,000 அபராதம் விதிக்கப்பட் டது. முகமது யாசின் ஹமீத் சுல் தான் எனப்படும் அவர் முறையான உரிமம் இன்றி இச்செயலில் ஈடுபட்டதாக மனிதவள அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவிக் கிறது. கடந்த 2014 நவம்பர் முதல் 2015 மே வரையில் யாசின் துண் டறிக்கைகளையும் விளம்பரங் களையும் விநியோகித்ததோடு வெளிநாட்டில் வேலை வாங்கித் தரும் செயலிலும் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது. விளம்பரங்களால் ஈர்க்கப்பட்ட மூன்று வெளிநாட்டு ஊழியர்கள் தங்களுக்கு கனடாவில் வேலை வாங்கித் தருமாறு யாசினை அணுகியதோடு அவரிடம் ஆயிரக் கணக்கான வெள்ளியைத் தந்துள் ளனர்.
உரிமமற்ற வேலைவாய்ப்பு நடவடிக்கைகள்: ஆடவருக்கு $30,000 அபராதம்
1 mins read

