வீடுகளை அலங்கரிக்கும் சோபா, மேஜை, நாற்காலி உள்ளிட்ட மரத்தால் ஆன அறைகலன்கள் வாங்குவதற்கு அதிகமான சிங்கப்பூரர்கள் ஜோகூரை நாடிச் செல்கின்றனர். கடந்த மாதம் 'தி நியூ பேப்பர்' ஜோகூரில் அறைகலன்கள் விற்பனை செய்யும் மூன்று கடைகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டது. அப்போது 30 விழுக்காட்டு வாடிக்கையாளர்கள் சிங்கப்பூரர்கள் என்பது தெரியவந்தது. ஜோகூரில் அறைகலன்கள் வாங்குவதால் 40 விழுக்காட்டு பணம் சேமிக்க முடிவதாக சிங்கப்பூர் வாடிக்கையாளர் ஒருவர் கூறியதாக அந்நாளேடு தெரிவித்தது. அதே போல் வீட்டுக்குத் தேவையான ஃபேன், அலங்கார விளக்குகள் போன்ற மின்சாதனப் பொருட்கள் விற்கும் கடைகளும் அதிகமான சிங்கப்பூர் வாடிக்கை யாளர்களைக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது
அறைகலன்கள் வாங்க ஜோகூருக்குச் செல்லும் சிங்கப்பூரர்கள்
1 mins read

