திறன் மேம்பாட்டை ஊக்குவிக்க 'எடுசேவ்' விருது அறிமுகம்

திறன் மேம்பாட்டை ஊக்குவிக்க 'எடுசேவ்' விருது அறிமுகம்

1 mins read
daa27b0a-299c-4864-83cb-d7940aca8577
-

பல­துறைத் தொழிற்­கல்­லூரி மாண­வர்­களுக்­கும் அடுத்த ஆண்டு முதல் 'எடுசேவ் மெரிட் பர்சரி', 'எடுசேவ் குட் புரோ­கி­ரஸ்' ஆகிய 'எடுசேவ்' விரு­து­கள் வழங்கப்­ப­ட­வுள்­ளன. இதன் மூலம் ஆண்­டு­தோ­றும் 15,000 மாண­வர்­கள் பயன்­பெ­று­வர். அத்­து­டன், ஏட்டுக் கல்வி தவிர திட்டப்பணிகள், கருத்­த­ரங்குகள், போட்­டி­கள் போன்ற­ வற்­றில் பங்­கெ­டுத்­துச் சாதிக்­கும் பல­துறைத் தொழிற்­கல்­லூரி, தொழில்­நுட்ப கல்விக் கழக மாண­வர்­களுக்­காக 'எடுசேவ் ஸ்கில்ஸ்' விருதை­யும் அடுத்த ஆண்­டி­லி­ருந்து கல்வி அமைச்சு அறி­மு­கம் செய்­ய­வி­ருக்­கிறது. இந்தப் புதிய விருதின் மூலம் 3,500 மாண­வர்­கள் ஆண்­டு­தோ­றும் பய­னடை­வர். இவற்­றால் கல்வி அமைச்சு ஆண்­டுக்கு ஒன்பது மில்­லி­யன் வெள்­ளியைக் கூடு­த­லா­கச் செலவிட வேண்­டி ­யி­ருக்­கும்.

யீ‌ஷூனில் இருக்­கும் நார்த் வியூ தொடக்­கப்­பள்­ளி­யில் 'எடுசேவ்' விருது வழங்­கும் நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட தற்­கா­லிக கல்வி அமைச்­சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங், "பல­துறைத் தொழிற்­கல் ­லூரி மாண­வர்­களும் கடி­ன­மாக உழைத்து நல்ல மதிப்­பெண்­கள் பெற்று மேம்பாடு கண்­டுள்­ள­னர். அவர்­களும் அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும்," என்று கூறினார். இதற்கு முன்பு இந்த விரு­து­கள் தொடக்­கப்­பள்ளி, உயர்­நிலைப் பள்ளி, தொடக்­கக் கல்லூரி, தொழில்­நுட்ப கல்விக் கழகம் ஆகி­ய­வற்றைச் சேர்ந்த மாண­வர்­களுக்கு மட்டுமே வழங்கப்­பட்டு வந்தன.