அறுவரிடம் $2.85 மில்லியன் ஏமாற்றியவருக்கு 8 ஆண்டு சிறை

ஆறு பேரின் $2.85 மில்லியனுக்கும் அதிகமானத் தொகையை மோசடி செய்த , 47 வயது முரளிதரன் முகுந்தனுக்கு மே 9ஆம் தேதி எட்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஏமாற்றப்பட்டவர்கள் ஏற்கெனவே முந்தைய முதலீடுகளில் இழப்புகளைச் சந்தித்தவர்கள்.

அவர்களது பணத்தை மீட்க உதவ முடியும் என்று கூறி, தொடர்ச்சியான “கட்டணங்கள்”, “பங்கு” மற்றும் பிற கற்பனையான கட்டணங்கள் மூலம் அவர்களை முரளிதரன் ஏமாற்றினார்.

ஜூன் 2020ஆம் தேதி முதல் அக்டோபர் 2022ஆம் தேதி வரை இந்தக் குற்றங்களைப் புரிந்த சிங்கப்பூரரான முரளிதரன், ஏப்ரல் 5ஆம் தேதி $1 மில்லியனுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த 18 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

மீதமுள்ள தொகையுடன் தொடர்புடைய மேலும் 40 குற்றச்சாட்டுகள் தண்டனையின்போது கருத்தில்கொள்ளப்பட்டன.

முதல் பலியானவர் 77 வயதான ஓய்வு பெற்ற மாது, “தங்க டைம்ஷேர்” முதலீட்டுத் திட்டத்தில் இழப்பைச் சந்தித்தவர்.

முரளிதரன் அந்த முதலீட்டுத் திட்டத்தில் அங்கத்தினர் அல்லர்.

2020ல், ரிபப்ளிக் பிசினஸ் கன்சல்டன்சி (ஆர்பிசி) என்ற கடன் மீட்பு நிறுவனத்தில் விற்பனை மற்றும் செயல்பாட்டு மேலாளராகப் பணியாற்றினார்.

கடன் வசூலிப்பவராக வேலை செய்தபோது, சேவை பெறுநர்களை அவர் சந்தித்தார். அவர்கள் தங்கள் முதலீடுகளை மீட்டுக்கொண்டு, பணத்தை மீட்டெடுக்க விரும்பினர்.

அத்தகைய முதலீடுகளிலிருந்து பணத்தை மீட்பது சாத்தியமில்லை என்பதை முரளிதரன் அறிந்திருந்தார். ஆனால், தனது சூதாட்டக் கடன்களையும் சட்டவிரோதக் கடன்களையும் செலுத்தப் பணம் தேவைப்பட்டதால் ஏமாற்ற முடிவு செய்தார் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

அந்த மாது தங்க டைம்ஷேர் முதலீட்டுத் திட்டம் ஒன்றில் பணத்தை இழந்ததையும் அவர் அறிந்தார்.

2020 ஜூலை 9ஆம் தேதி அவரைச் சந்தித்த முரளிதரன், “பாக்யம் ஏஜென்சிஸ்” என்ற அமைப்பு அவரது முந்தைய முதலீட்டிலிருந்து 575,000 பவுண்டை (973,000 சிங்கப்பூர் வெள்ளி) மீட்டதாகவும், அதைப் பெறுவதற்கு $30,000 “கட்டணமாக” வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

ஆறு நாட்களுக்குப் பின் அந்த மாதும் அவரது கணவரும் முரளிதரனைச் சந்தித்துத் தொகையைக் கொடுத்தனர். அதன் பிறகு, “பாக்யம் ஏஜென்சிஸ் பெங்களூர்” வழங்கிய ரசீதை மாதிடம் கொடுத்த முரளிதரன் பணம் செலுத்தப்பட்டது என்றார்.

பல சந்தர்ப்பங்களில், 2020ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை முரளிதரன் அந்த மாதிடம் மேலும் $310,000 ஏமாற்றினார்.

2021 ஜனவரி 30ஆம் தேதி, மாதின் மகன் காவலதுறையில் புகார் அளித்தார்.

முரளிதரன் ஆர்பிசி-யில் இருந்து விலகி, கோயிஸ்டாடோர் கடன் மேலாண்மை என்ற நிறுவனத்தில் 2021 மே மாதம், அதன் செயல்பாட்டுத் தலைவராக சேர்ந்தார்.

2022ஆம் ஆண்டு மே மாதம் அவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவதற்கு முன்பு இதேபோன்று மேலும் ஐந்து பேரை அவர் ஏமாற்றினார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு மோசடிக்கும் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!