சிங்கப்பூரில் கிளையைத் திறக்க அந்த்ரோபிக் திட்டம்

சிங்கப்பூரில் கிளையைத் திறக்க அந்த்ரோபிக் திட்டம்

1 mins read
b9991fa7-c17a-47ce-be5d-e1b7af7e50fb
கிளோட் செயற்கை நுண்ணறிவுத் தளத்தை உருவாக்கிய அந்திரோபிக். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

கிளோட் செயற்கை நுண்ணறிவுத் தளத்தை உருவாக்கிய அந்த்ரோபிக் நிறுவனம் சிங்கப்பூரில் கிளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது.

வியாழக்கிழமை (ஜூன் 4) அந்நிறுவனத்தின் இணையத்தளத்தில் நான்கு வேலை வாய்ப்புகள் இடம்பெற்றன.

நிதி, பொருட்செயல் ஆதரவு (product support), பொருளியல் ஆய்வு போன்ற துறைகளில் அந்த வேலை வாய்ப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஏற்கெனவே ‘ஓப்பன்ஏஐ’, ‘கூகல் டீப்மைண்ட் ‘போன்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் சிங்கப்பூருக்குத் தங்களின் செயல்பாடுகளை விரிபடுத்திக்கொண்டன.

அதனைத் தொடர்ந்து இப்போது அந்த்ரோபிக் இங்கு கிளையைத் திறக்க எண்ணம் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர்ச் சந்தையில் செயற்கை நுண்ணறிவு பின்பற்றப்பட வகைசெய்வதும் முன்களச் செயற்கை நுண்ணறிவுத் தளங்களை உருவாக்குவதும் அதன் இலக்குகளாகும்.

அந்த்ரோபிக் இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்ட வேலை வாய்ப்புகளில் ஒன்று இவ்வட்டாரத்துக்கான அந்நிறுவனத்தின் வர்த்தகக் கணக்கியல் பிரிவுக்கான தலைமைப் பொறுப்பாகும்.

அப்பொறுப்புக்கு நியமிக்கப்படுபவர் அந்திரோபிக்கின் அனைத்துலகக் கணக்கியல் பிரிவின் தலைவருக்குக்கீழ் பணிபுரிவார்.

அந்திரோபிக்கின் அனைத்துலகக் கணக்கியல் பிரிவு அயர்லாந்துக் குடியரசுத் தலைநகர் டப்ளினில் அமைந்துள்ளது.

மற்றொரு வேலை வாய்ப்பு, வட்டார அளவில் ஆய்வுகளை மேற்கொள்ளும் பொருளியல் வல்லுநருக்கானதாகும். அந்தப் பொறுப்பை வகிப்பவர் அரசாங்கங்கள், கல்விமான்கள், தொழில்துறைப் பங்காளிகள் போன்றோருடன் இணைந்து பணியாற்றுவார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்வர்த்தகம்செயற்கை நுண்ணறிவுஏஐவேலை