பிரதமர் லாரன்ஸ் வோங், இவ்வாண்டுக்கான தேசிய தினப் பேரணி உரையை ஆகஸ்ட் 23ஆம் தேதி ஆற்றவிருக்கிறார்.
அங் மோ கியோவில் உள்ள மத்திய தொழில்நுட்பக் கல்விக் கழக வளாகத்தில் பேரணி இடம்பெறும் என்று பிரதமர் அலுவலகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) தெரிவித்தது.
தேசிய தினப் பேரணி, அரசியல் உரைகளில் ஆக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமர், கொள்கை குறித்த அறிக்கைகளையும் அறிவிப்பார்.
இவ்வாண்டு நடைபெறும் பேரணி, திரு வோங்கின் மூன்றாவது பேரணியாகும்.

