மத்திய கிழக்கில் நீடித்து வரும் பூசல் காரணமாக உலகளாவிய விமானப் போக்குவரத்தில் ஏற்பட்டிருக்கும் இடையூறு, பயணக் காப்பீடு மீது கவனத்தைத் திருப்பி உள்ளது.
வழக்கமான தனிநபர் மற்றும் வர்த்தகப் பயணக் காப்பீட்டுத் திட்டங்கள் போர் தொடர்பான இழப்புகளை உள்ளடக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
சில தனித்துவ வர்த்தகப் பயணக் காப்பீட்டுத் திட்டங்கள் போர் மற்றும் மோதல்களினால் ஏற்படும் இழப்புகளை உள்ளடக்கும்போது, பெரும்பாலான நிறுவனங்கள் அதற்கு அதிகம் செலவழிக்கும் நிலை உள்ளது.
அதுபற்றி விளக்கிய சிங்கப்பூர் பொதுக் காப்பீட்டுச் சங்கத்தின் பேச்சாளர், பேரழிவுகளால் ஏற்படும் நிகழ்வுகள் ஒரேநேரத்தில் ஏராளமான காப்பீட்டுக் கோரிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்றார்.
ஆயுத மோதல்களின் போக்கும் கணிக்கமுடியாத நிலையும் காப்பீடு செய்துகொள்வோர் விலை நிர்ணயம் செய்வதில் சிரமங்களை ஏற்படுத்தக்கூடும் என்றார் அவர்.
எனவே பயணச் சீட்டுக்கு முன்பதிவு செய்யும்போது காப்பீட்டுத் திட்டங்களைப் பற்றியும் அரசாங்க ஆலோசனைகள் பற்றியும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

