சிங்கப்பூரில் கொடுவா மீன் பண்ணைகளின் எதிர்காலம் மீன்களைத் தாக்கும் ஒரு கொடிய கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், தீவின் தெற்கு கடல் பகுதியில் செயல்படும் மீன் பண்ணை ஒன்று அதன் வணிக உற்பத்தியை நிறுத்தும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் ஊட்டச்சத்துத் தேவைகளில் 30 விழுக்காட்டை உற்பத்தி செய்ய சிங்கப்பூர் உணவு அமைப்பு தீவின் தெற்கு கடல் பகுதியில் மீன்வளர்ப்புக்காக அதிக இடங்களைத் தேடிவருகிறது. இந்தக் கிருமித்தொற்று அமைப்பின் முயற்சிகளுக்குப் பேரிடையூறாக உள்ளது.
2023ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி, பாராமுண்டி குழுமம் அதன் அனைத்து ஆசியக் கொடுவா மீன்களையும் பிடித்துவிட்டது. மேலும், ‘ஸ்கேல் டிராப்’ கிருமித் தொற்றுப்பரவல் காரணமாக அதன் மூன்று கடல் பண்ணைகளிலும் இளம் மீன்களைச் சேமித்து வைப்பதை நிறுத்தியது.
ஜோகூர் நீரிணையில்தான் பெரும்பாலான மீன் பண்ணைகள் அமைந்துள்ளன. அங்கு செயல்படும் பண்ணைகள் கிருமித்தொற்று குறித்து சிலநேரம் புகாரளிக்கின்றன என கடந்த புதன்கிழமை ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்போது சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.