புளூம்பெர்க் அவதூறு வழக்கில் அமைச்சர்கள் டான் சீ லெங், கா. சண்முகம் இருவருக்கும் ஏற்பட்ட சட்டரீதியான செலவை ஈடுகட்ட அவர்களிடம் புளூம்பெர்க்கும் அதன் செய்தியாளர் லோ ட வெய்யும் மொத்தம் 290,000 வெள்ளியைச் செலுத்தவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை (ஜூலை 30) ரகசியமான முறையில் நீதிமன்ற விசாரணை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.

