சீனப் புத்தாண்டுக்கு முந்திய நாளான ஜனவரி 28ஆம் தேதி குறிப்பிட்ட வழித்தடங்களில் ரயில், பேருந்துச் சேவைகள் நீட்டிக்கப்படும் என்று எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டௌன்டவுன், வடகிழக்குப் பாதைகளிலும் செங்காங்-பொங்கோல் இலகு ரயில் பாதையிலும் ரயில் சேவை கிட்டத்தட்ட இரண்டு மணி 15 நிமிட நேரம் நீட்டிக்கப்படும் என்று அது கூறியது.
19 பேருந்துச் சேவைகளும் நீட்டிக்கப்படுவதாக, எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம், ஜனவரி 17ஆம் தேதி தெரிவித்தது.
ஜனவரி 28ஆம் தேதி அலுவலகங்கள் முன்கூட்டியே மூடப்படும் என்பதால், உச்சநேரத்தில் மட்டும் சேவை வழங்கக்கூடிய ‘எல்சிஎஸ்1’, ‘எல்சிஎஸ்2’ உள்ளிட்ட 22 பேருந்துச் சேவைகள் அவற்றின் மாலை நேரச் சேவைகளை முன்கூட்டியே இயக்கும் என்று கூறப்பட்டது.
இந்தப் பேருந்துச் சேவைகள் காலை நேரம் வழக்கம்போலவே இயங்கும் என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் கூறியது.