பயணியைத் தள்ளியதாக வாடகை கார் ஓட்டுநர்மீது குற்றச்சாட்டு

பயணியிடம் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதாக சந்தேகிக்கப்படும் தனியார் வாடகைக் கார் ஓட்டுநர்மீது நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சுமத்தப்பட்டது.

அந்த 53 வயதான தனியார் வாடகைக் கார் ஓட்டுநரின் பெயர் டோக் வீ ஹூங்.

தன் காரில் பயணம் செய்த 59 வயதான ஆலன் வோங்கை டோக் மூர்க்கத்தனமாகத் தள்ளியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் கடந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி காலை 5.20 மணியளவில் சாங்கி நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

‘சிட்டிகேப்’ ஓட்டுநராகயிருந்த டோக், திரு வோங்கைக் காரிலிருந்து வெளியே இழுத்து அவரைப் பின்னோக்கித் தள்ளினார் எனவும் அதனால் வோங் சாலைத் தடுப்பின்மீது மோதி பின்னோக்கியபடியே வாய்க்காலில் விழுந்ததாகவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வழக்கு வரும் பிப்ரவரி 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூர்க்கத்தனமாக தாக்கி காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக டோக்கிற்கு ஓர் ஆண்டு வரை சிறைத்தண்டனையும் $5,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!