10,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் ஊழியர்களுக்கு ஏஐ பயிற்சி

10,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் ஊழியர்களுக்கு ஏஐ பயிற்சி

1 mins read
3cad5f4d-a09b-4f8e-83a9-d367eeafc6f4
திட்டம் குறித்து தகவலை தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின் மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹவ் சனிக்கிழமையன்று டேட்டாபிரிக்ஸ் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் வெளியிட்டார்.  - படம்: டேட்டாபிரிக்ஸ்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ), மேம்பட்ட தரவு உள்ளிட்ட தொழில்நுட்ப திறன்களை, பயிற்சி மூலம் 10,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் ஊழியர்களுக்கு வழங்கவுள்ளது ‘டேட்டாபிரிக்ஸ்’ நிறுவனம்.

என்டியூசி லேர்னிங் ஹப், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து ‘டேட்டாபிரிக்ஸ்’ இந்த திறன் பயிற்சியைத் தருகிறது.

செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட தரவு பயிற்சி திட்டத்தில் இணைந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும்.

ஏற்கெனவே இத்துறையில் வேலை செய்துகொண்டிருந்தாலும் அல்லது இத்துறைக்கு புதிதாக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்றவாறு பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பயிற்சி திட்டங்கள் மூலம் ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட தரவுகளின் அடிப்படை திறன்களை முழுமையாக கற்றுக்கொள்வார்கள் என்றும் இத்துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து அவர்களுக்கு தெரிய வரும் என்றும் ‘டேட்டாபிரிக்ஸ்’ தெரிவித்தது.

இந்த திட்டம் குறித்தத் தகவலை தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின் மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹவ் சனிக்கிழமையன்று டேட்டாபிரிக்ஸ் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுதரவுபயிற்சி