புளூம்பெர்க் செய்தி நிறுவனத்துக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணை தொடங்கும் நிலையில் உள்துறை அமைச்சர் கா. சண்முகமும் மனிதவள அமைச்சர் டான் சீ லெங்கும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) உச்ச நீதிமன்றக் கட்டடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
காலை 9.30 மணியளவில் டாக்டர் டான் வந்த நிலையில், 15 நிமிடங்கள் கழித்து திரு சண்முகம் வந்து சேர்ந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
‘சிங்கப்பூர் பங்களா வீட்டு உடன்பாடுகளின் ரகசியத்தன்மை அதிகரிப்பு’ என்ற தலைப்பில் கடந்த 2024 டிசம்பர் 12ஆம் தேதி புளூம்பெர்க் வெளியிட்ட கட்டுரை தொடர்பிலான வழக்கு இது.
வெளிப்படுத்தல் தேவை இல்லாததைச் சாதகமாகப் பயன்படுத்தி, சொத்துப் பரிவர்த்தனைகளை வெளிப்படைத்தன்மையற்ற முறையில் தாங்கள் மேற்கொண்டதாக அந்தக் கட்டுரை தவறாகப் புரிந்துகொண்டது என இரு அமைச்சர்களும் தெரிவித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, 2025 ஜனவரி 6ஆம் தேதி அந்த அமெரிக்க ஊடகத்திற்கு எதிராகவும் கட்டுரையின் பின்னணியில் உள்ள செய்தியாளர் திரு லோ டெ வெய்க்கு எதிராகவும் இரு அமைச்சர்களும் தனித்தனியாக வழக்குத் தொடுத்தனர்.
செவ்வாய்க்கிழமை காலை திரு லோ 9.10 மணியளவில் நீதிமன்றக் கட்டடத்தில் காணப்பட்டார்.

