சிங்கப்பூரில் செயல்படும் டி‌எச்எல் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கை

சிங்கப்பூரில் செயல்படும் டி‌எச்எல் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கை

2 mins read
8f841b33-3f5e-4960-b4d9-b490f8b14e11
சரக்குப் போக்குவரத்து நிறுவனமான டிஎச்எல் எத்தனை ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தது என்று தெரியவில்லை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் செயல்படும் டிஎச்எல் (DHL) நிறுவனப் பிரிவு ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சரக்குப் போக்குவரத்து நிறுவனமான டிஎச்எலில் எத்தனைப் பேர் ஆட்குறைப்புச் செய்யப்பட்டனர், எந்தப் பொறுப்புகளில் உள்ளோர் ஆட்குறைப்புச் செய்யப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அதுகுறித்தத் தகவல்களை டிஎச்எல் நிறுவனமும் அதன் தொழிற்சங்கமும் பகிர்ந்துகொள்ள மறுத்துவிட்டன.

சிங்கப்பூரில் செயல்பட்டுவரும் டிஎச்எல் நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கைக் குறித்து இரண்டு மாதங்களுக்குமுன் இணையத்தில் தகவல் கசிந்தது.

வேலையிடக் கலாசாரம் குறித்து ரெட்டிட் இணையத்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் நிறுவனத்தின் அண்மைய ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்து மார்ச் 30ஆம் தேதி பயனீட்டாளர் ஒருவர் பதிவிட்டார்.

டிஎச்எல் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் மார்ச் 31ஆம் தேதி அண்மைய ஆட்குறைப்பு நடவடிக்கையை உறுதிப்படுத்தினார்.

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட ஆட்குறைப்பு நடவடிக்கை பற்றி இணையத்தளத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலை அறிந்திருப்பதாக அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

அனைத்து ஊழியர்களையும் நியாயமாகவும் மரியாதையுடனும் நடத்துவதில் நிறுவனம் உறுதியாக இருக்கிறது என்றும் உள்ளூர் தரநிலைகள், நிறுவனத்தின் கொள்கைகள் ஆகியவற்றுக்கு ஏற்ப நிறுவனம் நடந்துகொள்கிறது என்றும் அவர் கூறினார்.

தற்போதைய வர்த்தகத் தேவைகளின் அடிப்படையில் ஊழியரணி தொடர்பான முடிவுகள் அனைத்தும் எடுக்கப்படுவதாகவும் டிஎச்எல் நிறுவனம் சுட்டியது.

டிஎச்எல் நிறுவனத்துக்கு 1 சாங்கி சவுத் ஸ்தீரிட்டிலும் 81 ஆல்ப்ஸ் அவென்யூவிலும் இரண்டு அலுவலகங்கள் உள்ளன.

சிங்கப்பூர்க் கையேடு, வணிகத் தொழிற்சங்கம் டிஎச்எல் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதாகக் குறிப்பிட்டது.

பாதிக்கப்பட்ட ஊழியர்கள் நியாயமாக நடத்தப்படுகின்றனரா என்பதைத் தொழிற்சங்கம் உறுதிப்படுத்தும் என்று அது சொன்னது.

குறிப்புச் சொற்கள்