சாலையோரத் தடுப்புகள் மீது ஏறிய கார்

சாலையோரத் தடுப்புகள் மீது ஏறிய கார்

1 mins read
44beb0ff-9a96-4563-ac44-5fe16c5248ab
பிடோக் நார்த் அவென்யூ 3ஐ நோக்கிச் செல்லும் பிடோக் நார்த் ஸ்திரீட் 1இல் வியாழக்கிழமை 6.45 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிடோக் நார்த் பகுதியில் 83 வயது ஆடவர் ஓட்டிய கார் சறுக்கிச் சென்று சாலையோரப் புல்தரை, தடுப்புகள் மீது ஏறியது.

சம்பவம் குறித்து வியாழக்கிழமை மாலை 6.45 மணிக்குத் தகவல் கிடைத்ததாகவும் ஆடவர் சுய நினைவுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்தது. 

அவ்விபத்து பிடோக் நார்த் அவென்யூ 3ஐ நோக்கிச் செல்லும் பிடோக் நார்த் ஸ்திரீட் 1இல் நடந்தது.

விபத்து குறித்த படங்கள் சமூக ஊடகத்தில் பரவின. அதில் பழுப்பு நிற கார் ஒன்று சாலையோரத் தடுப்புகளை உடைத்து புல் தரையில் நிற்பதைக் காணமுடிந்தது.

காரின் முன்பகுதியும் இடப்பக்கமும் சேதமடைந்து காணப்பட்டன.

விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
விபத்து