மதுபோதையில் பாதுகாவல் வாகனத்தை இறுகப் பற்றித் தொல்லை கொடுத்த ஆடவர் கைது

கவசப் பாதுகாவல் வாகனம் ஒன்று நகரும்போது அதன் பின்புறத்தைப் பற்றிக்கொண்டு தொங்கியபடி 22 வயது ஆடவர் சென்றார்.

பொது இடத்தில் மதுபோதையில் தொல்லை கொடுத்ததன் தொடர்பில் அந்த ஆடவர் மே 3ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.

விக்டோரியா ஸ்திரீட், ஸ்டாம்ஃபோர்ட் ரோடு ஆகியவற்றுக்கு இடையே 850 மீட்டர் தூரம்வரை வாகனத்தைப் பற்றியபடி அந்த ஆடவர் சென்றுள்ளார்.

அதையடுத்து வாகனத்தில் இருந்த துணைக் காவல் அதிகாரிகள் ஆடவரைப் பார்த்துவிட்டனர்.

வாகனத்தை அதிகாரிகள் நிறுத்திவிட்டு அதிலிருந்து வெளியேறியபோது ஆடவர் உடனே கீழே இறங்கி நடந்து சென்றதாகக் காவல்துறை தெரிவித்தது.

குவீன் ஸ்திரீட்டில் அதிகாலை 3 மணியளவில் கவச வாகனத்தில் அதிகாரிகள் ‘ஏடிஎம்’ பணக் கலங்களை ஏற்றும் வேளை ஆடவர் வாகனத்தினுள் செல்ல முயன்றிருக்கிறார் என்று விசாரணைகள் கூறுகின்றன.

துணைக் காவல் அதிகாரிகள் பின்னர் உதவிக்குக் காவல்துறையினரை அழைத்தனர். மே 4ஆம் தேதி ஆடவர் மீது குற்றம் சாட்டப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!