தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர்-மெல்பர்ன் விமானச் சேவையை நிறுத்தவிருக்கும் எமிரேட்ஸ்

1 mins read
70e2a283-0ab4-45fc-9de8-975323f95e19
சிங்கப்பூர்-மெல்பர்ன் இடையிலான விமானச் சேவை 1996ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவின் மெல்பர்னுக்கும் இடையிலான விமானச் சேவைகளை துபாயின் எமிரேட்ஸ் நிறுவனம் நிறுத்த இருக்கிறது.

சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் அதன் இறுதி மதிப்பீட்டை வெளியிட்டதும் சேவை நிறுத்தப்படும் நாள் தீர்மானிக்கப்படும் என்றும் எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவின் மற்றொரு நகரமான பிரிஸ்பனுக்கும் இடையிலான விமானச் சேவையை நிறுத்த அந்நிறுவனம் 2019ஆம் ஆண்டில் விண்ணப்பம் செய்தது.

சிங்கப்பூர்-மெல்பர்ன் இடையிலான விமானச் சேவை 1996ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது.

கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது மட்டும் அது மூன்று ஆண்டுகளுக்குத் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

சிங்கப்பூருக்கும் துபாய்க்கும் இடையிலான விமானச் சேவை தொடரும் என்று எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது. நாள்தோறும் நான்கு விமானச் சேவைகள் வழங்கப்படும் என்று அது கூறியது.

மெல்பர்னிலிருந்து நேரடியாக துபாய்க்குச் செல்லும் விமானச் சேவை நாள்தோறும் இரண்டு முறை வழங்கப்படும் என்று எமிரேட்ஸ் தெரிவித்தது.

அதன் பங்காளியான குவன்டஸ் மூலம் சிங்கப்பூருக்கும் மெல்பர்னுக்கும் இடையிலான விமானச் சேவையை வழங்க இருப்பதாக எமிரேட்ஸ் கூறியது.

இந்த விமானச் சேவை நாள்தோறும் இருமுறை வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்