சாங்கி விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் உள்ள கழிவறை ஒன்றில் தீ மூண்டதாகத் தமிழ் முரசு அறிகிறது.
காவல்துறை அதிகாரிகள், சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் ஆகியோர் விமான நிலைய அவசரப் பிரிவுத் தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்ததாகத் தமிழ் முரசு அறிகிறது.
இரவு 8.40 மணியளவில் மூன்றாம் தளத்தில் உள்ள கழிவறை ஒன்றில் மூண்டதாக நம்பப்படும் தீயை விமான நிலையத் துப்புரவுப் பணியாளர் அணைத்ததாகக் கூறப்படுகிறது.
யாருக்கு எந்தக் காயமும் இல்லை. அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது.