சிங்கப்பூரில் கணக்கியல் மற்றும் நிதித் துறைகளில் உள்ள 60,000 நிபுணர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவைக் கற்றுக்கொள்வர்.
மோசடி கண்டறிதலைத் தானியக்கமாக்குவதற்கான செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்த அவர்கள் தெரிந்துகொள்வர்.
மேலும், தணிக்கைக்காக மூல நிதித் தரவுகளிலிருந்து பயனுள்ள நுண்ணறிவுகளைப் பெறுவது உள்ளிட்ட எல்லாவித செயற்கை நுண்ணறிவுத் திறன்களையும் அந்த நிபுணர்கள் கற்பர்.
அத்தகைய பயிற்சிபெறும் தொழில்நுட்பம் சாராத நிபுணர்களில் முதல் குழுவினராக அவர்கள் இருப்பர்.
2029ஆம் ஆண்டுக்குள் 100,000 ஊழியர்கள் தங்கள் வேலையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் தன்னம்பிக்கை பெற தேசிய அளவில் மேற்கொள்ளப்படும் முயற்சியின் கீழ் அந்தப் பயிற்சி அமைகிறது.
‘ஏஎல்எக்ஸ்அக்கவுண்டன்சி’ (AIxAccountancy) எனப்படும் அந்த இலவசப் பயிற்சித் திட்டம் இரு கட்டங்களாக நடத்தப்படும்.
பயிற்சியில் பங்கேற்போர் தொடக்கத்தில் சேட்ஜிபிடி, கோபைலட் போன்ற செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்தி அடித்தளத்தை அமைத்துக்கொள்வர் என தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் சிங்கப்பூர் பட்டயக் கணக்காளர் பயிலகமும் இணைந்து வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

