கொவிட்-19 தொற்றுப் பரவல் காலகட்டத்தில் சிங்கப்பூரர்கள் நன்கொடைகளை வாரி வழங்கிய நிலையில், அந்த நற்செயலை அவர்கள் மேலும் தொடர அரசாங்கம் விரும்புவதாக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
அதற்கேதுவாக, அங்கீகாரம் பெற்ற பொதுநல அறக்கொடை அமைப்புகளுக்கான நன்கொடைகளுக்கு வழங்கப்படும் 250% வரிக்கழிவு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு, அதாவது 2026ஆம் ஆண்டு இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று (14-02-2023) வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் இதனை அறிவித்தார்.
நிதிச் சேமிப்பு தவிர்த்து, ஒரு நாட்டின் மீள்திறனுக்கு அந்நாட்டு மக்களே மிக முக்கியக் கூறாகத் திகழ்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.