போக்குவரத்து நிறுவனமான கிராப் புதிய போனஸ் திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது.
முழுநேர ஓட்டுநர்களின் ஒட்டுமொத்த வருமானம் குறையும் என்று அதிருப்திக் குரல்கள் எழுந்ததால் 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்படவிருந்த போனஸ் திட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், மே 18ஆம் தேதிமுதல் தனது வாடகைக் கார் ஓட்டுநர்களுக்கான புதிய போனஸ் திட்டத்தை கிராப் அறிமுகப்படுத்துகிறது.
ஆனால்,ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் பேசிய கிராப் ஓட்டுநர்கள் அந்தப் புதிய திட்டம் குறித்து மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்தனர்.
புதிய போனஸ் திட்டம் பற்றி அவர்கள் ஏப்ரல் மாதத்தில் செயலிமூலம் அறிந்துகொண்டனர். சிலர் தங்கள் வருமானம் பாதிப்படையும் என்று உறுதியாக நம்புகின்றனர். அதே நேரத்தில் சில ஓட்டுநர்கள் பழக்கங்களை மாற்றிக்கொண்டால் அப்படி நடக்க வாய்ப்பில்லை என்று மற்றவர்கள் கருதுகின்றனர்.
தானியங்கி முறையில் ஒதுக்கப்படும் குறிப்பிட்ட அளவிலான பயணங்களை முடிக்கும்போது ஓட்டுநர்களுக்கு அன்றாட போனஸ் வழங்கும் தற்போதைய சிறப்புப் பயண போனஸ் திட்டத்துக்கு மாறாக தொகையைத் திருப்பித் தரும் திட்டம் இந்தப் புதிய ‘ஸ்ட்ரீக்ஸ்’ அமையும்.
புதிய திட்டத்தின்கீழ், ஓட்டுநர்கள் இரண்டு மணிநேர ஒதுக்கீடுகள் அல்லது ‘ஸ்ட்ரீக்ஸ்’களை முன்பதிவு செய்ய வேண்டும், மேலும், 5 முதல் 8 விழுக்காடு பணத்தைத் திரும்பப் பெற ஒவ்வோர் இடத்துக்கும் இரண்டு பயணங்களை முடிக்க வேண்டும். இதில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நேர ஒதுக்கீடுகள் உள்ளன.
கூடுதலாக, அவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இரண்டு மணி நேர ஒதுக்கீடுகளை முடித்து, ஒவ்வோர் இடத்திலும் தானாக ஒதுக்கப்படும் இரண்டு பயணங்களை மேற்கொள்ளும்போது அவர்களுக்கு வாராந்தரத் தொகுப்பு போனஸ் கிடைக்கும்.
தொடர்புடைய செய்திகள்
ஓட்டுநர்கள் ஒவ்வோர் ஒதுக்கீட்டு நேரத்திலும் 70 விழுக்காடு, அதாவது ஒரு மணி நேரம் 24 நிமிடங்கள் இணையத்தில் இருக்க வேண்டும்.
வாரந்தோறும் அதிக ‘ஸ்ட்ரீக்ஸ்’களை முடிப்பவர்கள் அதிகத் தொகுப்பு போனஸ்களைப் பெறுவார்கள்.
கிராப் இணையத்தளத்தின்படி, ‘ஸ்ட்ரீக்ஸ்’களுக்கான குறைந்தபட்ச பயணத் தேவைகள் குறைவாக இருப்பதால், தற்போதுள்ள சிறப்புப் பயண போனசைவிட, அடைய எளிதாக இருக்கும் வகையில் ‘ஸ்ட்ரீக்ஸ்' வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சிறப்புப் பயண போனசுக்குத் தகுதி பெற, ஓட்டுநர்கள் பொதுவாக வார நாள்களில் ஏழு முதல் 16 பயணங்களையும் வார இறுதி நாள்களில் ஒவ்வொரு நாளும் 15 முதல் 30 பயணங்களையும் முடிக்க வேண்டும்.

