புகைமூட்டம் தணிந்தது: அனைத்துப் பகுதிகளிலும் காற்றுத் தரம் சீரடைந்தது

புகைமூட்டம் தணிந்தது: அனைத்துப் பகுதிகளிலும் காற்றுத் தரம் சீரடைந்தது

1 mins read
b8a43afe-1e82-41cd-bfc4-34e579f54703
புகைமூட்டம் சூழ்ந்து காணப்பட்ட மெரினா பே வர்த்தக வட்டாரம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் நிலவிவந்த புகைமூட்டத்தின் தாக்கம் லேசாகக் குறைந்துள்ளதைத் தொடர்ந்து, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காற்றின் தரம் மீண்டும் ஆரோக்கியமற்ற நிலையிலிருந்து நடுத்தர நிலைக்கு உயர்ந்துள்ளது.

தேசிய சுற்றுப்புற வாரியத்தின் தரவுகளின்படி, 24 மணி நேர காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு  அனைத்து வட்டாரங்களிலும் 100க்குக் கீழ் குறைந்துள்ளது.

சனிக்கிழமை (செப்டம்பர் 5) இரவு 9 மணி நிலவரப்படி, நாட்டின் வடக்கு (77), தெற்கு (77), கிழக்கு (80) மற்றும் மேற்கு (90) ஆகிய அனைத்துப் பகுதிகளிலும் காற்றின் தரம் தொடர்ந்து நடுத்தர அளவிலேயே நீடித்தது. 

முன்னதாக, சுமத்ரா, கலிமந்தான் பகுதிகளில் காட்டுத் தீயால் உருவான புகைமூட்டம் காரணமாக மத்திய, கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலைக்குச் சென்றது. 

அக்டோபர் 2023க்குப் பிறகு சிங்கப்பூரில் காற்றுத் தரம் இந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.  

குறிப்புச் சொற்கள்
புகைமூட்டம்காற்றுத்தரம்மாசுபாடுசிங்கப்பூர்