மார்ச் பள்ளி விடுமுறை முடிந்தும் கடற்பாலத்தில் நெரிசல் குறைந்தபாடில்லை

மார்ச் பள்ளி விடுமுறை முடிவுக்கு வந்தும் உட்லண்ட்ஸ் கடற்பாலத்தில் சிங்கப்பூருக்கு வரும் வாகனங்களால் செவ்வாய்க்கிழமை (மார்ச் 21) கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அன்றிரவு 11.06 மணிக்கு OneMotoring இணையத்தளத்தில் இடம்பெற்ற கண்காணிப்புக் கருவி படம், ஜோகூரிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைக் காட்டியது.

குடிநுழைவு நடைமுறைகளை நிறைவேற்றுவதில் நீண்ட காத்திருப்பு நேரம் குறித்து வாகனமோட்டிகள் ஃபேஸ்புக்கில் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

உட்லண்ட்ஸ் கடற்பாலத்தில் சிங்கப்பூரை நோக்கிவரும் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவது குறித்து குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் (ஐசிஏ) முன்னதாக எச்சரித்து இருந்தது.

பள்ளி விடுமுறை முடிந்தும் கடற்பாலத்தில் வழக்கத்திற்கு மாறாக போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்ததற்கான காரணம் தெரியவில்லை.

ஐசிஏ செவ்வாய்க்கிழமை பின்னிரவு 1.30 மணிக்கு வெளியிட்ட மற்றொரு ஃபேஸ்புக் பதிவில், உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் தணிந்திருப்பதாகத் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!