நிலச் சோதனைச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல்

வரும் வாரயிறுதியிலும் செப்டம்பர் பள்ளி விடுமுறையிலும் நிலச் சோதனைச்சாவடிகள் வழியாக மலேசியாவுக்குச் செல்வோர் கூடுதல் பயண நேரத்தைக் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதற்கு முன்னர் ஜூன் பள்ளி விடுமுறையின்போது குடிநுழைவு அனுமதியைப் பெற்று வெளியேறுவதற்கு மூன்று மணி நேரம்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அதே போன்ற நிலைஅமை உட்லண்டஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் கூறியது.

ஜூன் பள்ளி விடுமுறையின்போது போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து இருந்ததாகவும், விடுமுறை தொடக்கத்தில் ஜூன் 1ஆம் தேதி கிட்டத்தட்ட 250,000 பேர் இரு சோதனைச்சாவடிகளைக் கடந்துசென்றதாகவும் ஆணையம் தெரிவித்தது.

வாரயிறுதியான ஜூன் 16ஆம் தேதியிலிருந்து 18ஆம் தேதிவரை 1.2 மில்லியன் பேர் நிலச் சோதனைச்சாவடிகளைப் பயன்படுத்தியதாக அது கூறியது.

கார் வழியாகச் சென்றவர்கள் உச்சநேரங்களின்போது குடிநுழைவு அனுமதியைப் பெற்று வெளியேறுவதற்கு மூன்று மணி நேரம்வரை காத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!