உள்துறைக் குழு பயிற்சிக் கழகத்தின் முதல் அறிவார்ந்த வகுப்பறை

உள்துறைக் குழு பயிற்சிக் கழகத்தின் முதல் அறிவார்ந்த வகுப்பறை

2 mins read
05172771-69b8-49e0-9e1d-63dba74765bd
உள்துறைக் குழு பயிற்சிக் கழகத்தின் முதல் அறிவார்ந்த வகுப்பறை வியாழக்கிழமை (செப்டம்பர் 19) அதிகாரபூர்வ அறிமுகம் கண்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செயற்கை நுண்ணறிவு - மிகைமெய் காணொளிக் கருவி, உணர்திறன் விளக்கொளி உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட உள்துறைக் குழு பயிற்சிக் கழகத்தின் முதல் அறிவார்ந்த வகுப்பறை வியாழக்கிழமை (செப்டம்பர் 19) அதிகாரபூர்வ அறிமுகம் கண்டது.

உள்துறைக் குழு பயிற்சி உன்னத விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற உள்துறை துணை அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் வகுப்பறையை அறிமுகம் செய்தார்.

மேம்படுத்தப்பட்ட அறிவார்ந்த வகுப்பறைகள் உள்துறைக் குழுவின் பயிற்சியின் தரத்தை தொடர்ந்து உயர்த்தும் இலக்குக்கு உறுதுணையாக இருக்கும். பயிற்சியாளர்கள் பயனுள்ள, ஈடுபடுத்தும் கற்றல் அனுபவங்களை வழங்க தேவையான வசதிகளை இது கொண்டுள்ளது என்றார் அவர்.

நேரடி, மெய்நிகர், இரண்டும் இணைந்த பயிற்சிகளை வழங்கும் வசதியைக் கொண்டது இவ்வகுப்பறைகள். 2025 செப்டம்பருக்குள் முதல் 31 வகுப்பறைகளை உள்துறைக் குழு அமைக்கும்.

அண்மைய தொழில்நுட்பம், வளங்களை உள்துறைக் குழு பயிற்சியாளர்களுக்கு அளிப்பதில் குழு உறுதிபூண்டுள்ளதாக உள்துறைக் குழுவின் தலைமை நிர்வாகியான திரு. அன்வர் அப்துல்லா கூறினார்.

இந்த ஆண்டின் உள்துறைக் குழு பயிற்றுவிப்பாளர் (சிறப்பு பாராட்டு) விருதைப் பெற்ற இரண்டாம் வாரண்ட் அதிகாரி முகம்மது ஸாகி அஸ்,  தாம் உருவாக்கிய மாதிரி மரத் தாங்கியுடன்.
இந்த ஆண்டின் உள்துறைக் குழு பயிற்றுவிப்பாளர் (சிறப்பு பாராட்டு) விருதைப் பெற்ற இரண்டாம் வாரண்ட் அதிகாரி முகம்மது ஸாகி அஸ், தாம் உருவாக்கிய மாதிரி மரத் தாங்கியுடன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உள்துறைக் குழு அகாடமியில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் அங்கீகாரம் பெற்ற 17 உள்துறைக் குழு பயிற்சியாளர்கள், எட்டுப் பயிற்சிப் பிரிவுகளில் இரண்டாம் வாரண்ட் அதிகாரி முகம்மது ஸாகி அஸ்சும் ஒருவர்.

குடிமைத் தற்காப்புப் பயிற்சிக் கழகத்தின் நகர்ப்புற தேடல், மீட்புப் பிரிவின் பயிற்சியாளராக உள்ள 45 வயது திரு ஸாகிக்கு இந்த ஆண்டின் உள்துறைக் குழு பயிற்றுவிப்பாளர் (சிறப்புப் பாராட்டு) வழங்கப்பட்டது.

ஒவ்வொரு மாதமும் தனது வகுப்புகளுக்கு 80 கிலோ மரத்தைச் சுமந்து வருவார். எடையைவிட, கிட்டத்தட்ட 3 மீட்டர் நீளமுள்ள மரத் துண்டுகளின் பருமனே அவருக்குத் தொந்தரவாக இருந்தது.

பூகம்பம் அல்லது கட்டடம் இடிந்துவிழும் போது, சுவர்கள், சன்னல்கள், பாதைகளுக்கு முட்டுக்கொடுத்து நிலைப்படுத்துவதற்காக மரக்கட்டைகள், பலகைகளால் செய்யப்பட்ட இத்தகைய மரத் தாங்கிகள் பயன்படுத்தப்படும். ஒவ்வொன்றும் 4,000 கிலோவிற்கும் அதிகமான எடையைத் தாங்கும்.

இதற்குப் பதிலாக, பயிற்சி அளிக்க, மரப் பலகை, வெல்க்ரோ ஆகியவற்றைப் பயன்படுத்தி மாதிரி தாங்கியை திரு ஸாகி உருவாக்கினார்.

2021ல் அகாடமியில் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஓராண்டு காலத்துக்குள் அவர் உருவாக்கிய மாதிரி தாங்கிகள் உண்மையான கட்டமைப்புகளைவிட ஐந்து மடங்கு சிறியதாகவும், 5 கிலோவிற்கும் குறைவான எடையைக் கொண்டதாகவும் உள்ளன. அவை இப்போது பயிற்சியின் முக்கிய அங்கங்களாக உள்ளன.

குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் பயிற்சி தளபத்தியத்தின் பயிற்சியாளரான துணை சூப்பரிண்டெண்டென்டண்ட் (டிஎஸ்பி) முஹம்மது இஸ்வான் யூசி, 37. ஆண்டின் சிறந்த உள்துறைக் குழு பயிற்றுவிப்பாளர் (முழு நேரம்) விருதைப் பெற்றார்.  
குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் பயிற்சி தளபத்தியத்தின் பயிற்சியாளரான துணை சூப்பரிண்டெண்டென்டண்ட் (டிஎஸ்பி) முஹம்மது இஸ்வான் யூசி, 37. ஆண்டின் சிறந்த உள்துறைக் குழு பயிற்றுவிப்பாளர் (முழு நேரம்) விருதைப் பெற்றார்.   - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

விருது வென்ற மற்றொருவர், குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் பயிற்சித் தளபத்தியத்தின் பயிற்சியாளரான துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) முஹம்மது இஸ்வான் யூசி, 37. ஆண்டின் சிறந்த உள்துறைக் குழு பயிற்றுவிப்பாளர் (முழு நேரம்) விருதைப் பெற்றார் அவர்.

பாதுகாப்பு குறித்த பாடங்களை மேலும் பயனுள்ளதாக மாற்ற, அவர் குறுங் காணொளிகளை உருவாக்கியதுடன், இளம் பயிற்சியாளர்களை ஈடுபடுத்த தகவல் வரைவு படங்களையும் பயன்படுத்தினார்.

தன்னிடம் பயிற்சி பெறுபவர்களைப் பாடத்தில் ஈடுபடுத்த புதிய வழிகளைக் கண்டுபிடித்த டிஎஸ்பி இஸ்வானை அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் பாராட்டினார்.

குறிப்புச் சொற்கள்