பிப்ரவரி 15ல் பொது எச்சரிக்கை ஒலி

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வியாழக்கிழமை (பிப்ரவரி 15ஆம் தேதி) ‘முக்கியத் தகவலுக்கான’ சமிக்ஞை ஒலியை எழுப்பவிருக்கிறது.

முழுமைத் தற்காப்பு தினத்தையொட்டி அன்று மாலை 6.20 மணிக்குத் தீவு முழுவதும் அது ஒலி எழுப்பப்படும் எனச் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் படை தெரிவித்தது.

பொது எச்சரிக்கை முறையின்கீழ் அந்த ஒலி ஒரு நிமிடத்துக்கு எழுப்பப்படும். அதைக் கேட்டுப் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்று படை கூறியது.

சமிக்ஞை ஒலியைக் கேட்டவுடன் உள்ளூர் வானொலி, தொலைக்காட்சி மூலம் ஒலி, ஒளிபரப்பப்படும் தகவலைக் கேட்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

“சிங்கப்பூரையும் நமது எதிர்காலத்தையும் பாதுகாக்க நாம் உறுதியுடன் நின்று நமது கடமையைச் செய்ய வேண்டும் என்பதைப் பொதுமக்களுக்கு நினைவூட்டவே இந்த ஒலி எழுப்பப்படுகிறது,” எனப் படை தெரிவித்தது.

‘எஸ்ஜிசெக்யூர்’ செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ள கைத்தொலைபேசிகளிலும் அந்தச் சமிக்ஞை ஒலியைக் கேட்க இயலும்.

பொது எச்சரிக்கை முறை குறித்த மேல்விவரங்களுக்கு  go.gov.sg/pws என்ற இணைய முகவரியை நாடலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!