ஷங்ரிலா ஹோட்டலின் ‘தி லைன்’ உணவகத்தின் சுகாதாரத் தரநிலை குறைக்கப்பட்டது

ஷங்ரிலா ஹோட்டலில் உள்ள உணவகம் ஒன்றின் உணவுச் சுகாதார தரநிலை ‘ஏ’இலிருந்து ‘சி’க்குக் குறைக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டின் இறுதியில் அந்த உணவகத்தில் சாப்பிட்ட 10 பேர் நோய்வாய்ப்பட்டதே அதற்குக் காரணம்.

டிசம்பர் 26ஆம் தேதி ‘தி லைன்’ உணவகத்தில் சாப்பிட்ட பிறகு அவர்களுக்கு இரைப்பைக் குடலழற்சிக்கான அறிகுறிகள் ஏற்பட்டதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது.

இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அது சொன்னது. வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவை அறிகுறிகளில் அடங்கும்.

சிங்கப்பூர் உணவு அமைப்பும் சுகாதார அமைச்சும் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் எந்தவொரு சுகாதாரக் குறைபாடுகளும் அடையாளம் காணப்படவில்லை.

இருப்பினும், உணவகத்தின் சுகாதாரத் தரத்தை செப்டம்பர் 8ஆம் தேதியிலிருந்து 12 மாதங்களுக்கு அமைப்பு குறைத்தது. உணவகம் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தைத் தொடர்ந்து எச்சரிக்கை நடவடிக்கையாக ஹோட்டல் உடனடியாக கடலுணவு விநியோகிப்பாளர்களை மறுஆய்வு செய்து அவர்களை மாற்றியதாக ஷங்ரிலா சிங்கப்பூர் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

ஆரஞ்சு குரோவ் ரோட்டில் அமைந்துள்ள அந்த ஹோட்டல் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!