தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வடக்கு-தெற்குப் பாதையில் ரயில் கோளாறு: உட்லண்ட்சிலிருந்து ஈசூன் செல்ல கூடுதல் நேரம் பிடிக்கும்

1 mins read
6a76784c-1499-4f2b-b024-d7506423323a
உட்லண்ட்ஸ், அட்மிரல்டி, செம்பவாங், கேன்பரா, ஈசூன் ஆகிய நிலையங்களில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வடக்கு - தெற்கு ரயில் பாதையில் மரினா சவுத் பியர் நிலையத்தை நோக்கிச் செல்வோர் தங்கள் பயண நேரத்தில் கூடுதலாக 25 நிமிடங்களைச் சேர்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

உட்லண்ட்ஸ் - ஈசூன் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பயணம் தாமதமாகக்கூடும்.

ரயில் கோளாறு அதற்குக் காரணம் என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஈசூனுக்கும் உட்லண்ட்சுக்கும் இடைப்பட்ட நிலையங்களில் இலவச பேருந்துச் சேவைகளை வழங்கியுள்ளதாகவும் நிறுவனம் சொன்னது.

உட்லண்ட்ஸ் நிலையத்திலிருந்து வடக்கு-தெற்கு ரயில் பாதைக்குப் பதிலாக தாம்சன்- ஈஸ்ட் கோஸ்ட் பாதையைப் பயன்படுத்தும்படி எஸ்எம்ஆர்டி நிறுவனம் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

செப்டம்பர் முதலாம் தேதி வட்டப் பாதையில் ஏற்பட்ட சேவைத் தடங்கலால் மூன்று நிலையங்கள் பாதிக்கப்பட்டன. வட்டப் பாதையும் எஸ்எம்ஆர்டி நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்