ஏறக்குறைய $61,000 கையாடிய முன்னாள் சமய ஆசிரியருக்குச் சிறை

பலரிடமிருந்து ஏறக்குறைய $61,000 கையாடிய முன்னாள் சமய ஆசிரியருக்கு 11 மாதங்கள் இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரஸ்மான் சரிடின், 56, போதைப்பொருள் உட்கொள்ளும் பழக்கத்தைக் கொண்டவர் என்றும் மீண்டும் மீண்டும் குற்றம் புரிந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே திருட்டு உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர் சிறைக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

அண்மையில் ரஸ்மானால் ஏமாற்றப்பட்டோரில், சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ‘உம்ரா’ புனித யாத்திரை மேற்கொள்வதற்கான பயண ஏற்பாடு செய்து தருவதற்காக $33,000 ரொக்கம் வழங்கியோரும் அடங்குவர்.

அத்துடன், இந்தோனீசியப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியக் கல்வியில் மூவாண்டுகால முனைவர் பட்டப்படிப்புக்கு ஐந்து சிங்கப்பூரர்கள் அவரிடம் செலுத்திய $27,900யும் ரஸ்மான் கையாடினார்.

இதற்கிடையே, அவர் உரிமமின்றி பயண முகவர் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் மொத்தம் $79,500 ஈட்டினார். பயண முகவர் சட்டத்தின்கீழ் அது குற்றச்செயலாகும்.

ஜூலையில் அவர் ஐந்து குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். தண்டனை விதிக்கும்போது மேலும் 17 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

செவ்வாய்க்கிழமை ரஸ்மான் $30,000 பிணையில் விடுவிக்கப்பட்டார். அக்டோபர் 3ஆம் தேதி தனது தண்டனையை நிறைவேற்ற அரசு நீதிமன்றத்தில் சரண் அடையுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!