சிங்கப்பூருக்குள் 13 நாய், பூனைக்குட்டிகளை கடத்த முற்பட்டவருக்குச் சிறை

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் 10 நாய்க் குட்டிகளையும் 3 பூனைக் குட்டிகளையும் கடத்த முற்பட்ட 25 வயது வோங் காய் லாங்கிற்கு 40 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தச்சுத் தொழில் செய்யும் அந்த ஆடவர் தனது வாகனத்தில் உள்ள பயணிகள் இருக்கையின்கீழ் மாற்றியமைக்கப்பட்ட பெட்டி ஒன்றில் அவற்றைக் கடத்தி வந்தார் எனக் கூறப்பட்டது.

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட வழக்கமான சோதனையின்போது அவர் பிடிபட்டார்.

அவற்றில் ஐந்து நாய்க் குட்டிகள் நிமோனியா நோய்த்தொற்றால் இரண்டு வாரங்களில் இறந்ததாகவும் ஒரு பூனைக்குட்டி நைலான் பையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தன்மீது சுமத்தப்பட்ட பத்துக் குற்றச்சாட்டுகளை வோங் ஒப்புக்கொண்டார்.

அவருக்குத் தண்டனை விதிக்கும்போது அவர்மீது சுமத்தப்பட்ட மற்ற 16 குற்றச்சாட்டுகளும் கருத்தில்கொள்ளப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!