வாகனத்தில் தூங்கி, விபத்தை ஏற்படுத்திய ஆடவருக்குச் சிறை

மது அருந்திவிட்டு சிமெண்ட் கலவை வாகனத்தை ஓட்டிய சௌரிராஜுலு கருணாகரன் எனும் இந்திய நாட்டவர் தூங்கி விட்டார். அதன் காரணத்தால் பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து நேர்ந்தது. அதில் பலருக்குக் காயம் ஏற்பட்டது. ஒருவருக்கு இடுப்பு எலும்பு முறிந்தது.

மதுபோதையில் வாகனமோட்டிய குற்றத்துக்காகவும் கவனக்குறைவாக வாகனமோட்டி பலருக்குக் காயம் ஏற்படுத்திய குற்றத்துக்காகவும் அந்த 45 வயது ஆடவருக்கு நேற்று பத்து மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவர் விடுதலையானவுடன் 14 ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு மே 18ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு விபத்து நடந்தபோது, சௌரிராஜுலு இன்ஃபினிட் லாஜிஸ்டிக்ஸ் அண்ட் டிரேடிங் நிறுவனத்தின் ஊழியராக இருந்தார் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் நிக்கோல் இங் தெரிவித்தார்.

தூக்கக் கலக்கத்தில் இருந்த அவர், போக்குவரத்து விளக்கு வரும்போது திடீரென வாகனத்தை நிறுத்தியதால் பின்னால் வந்த பல வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!