ஒரு நபர் மார்ச் 2023ல் வீட்டில் இருந்தபோது, அவரது பக்கத்து வீட்டுக்காரரான 12 வயது சிறுவன், அவரிடம் பாலியல் செயலைச் செய்ய முன்வந்தார்.
ஐந்து மாதங்களுக்குப் பிறகு, அந்தச் சிறுவன் தனது பள்ளி நண்பரிடம் நடந்த சம்பவத்தைப் பற்றி கூறியபோது அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்ட ஆடவர் பிடிபட்டார்.
அதுபற்றி பள்ளியின் ஆலோசகரிடம் தெரிவிக்கப்பட்ட பிறகு, காவல்துறைக்குத் தகவல் சென்றது.
52 வயதான அந்த ஆடவர், வயது குறைந்த சிறுவனிடமிருந்து பாலியல் செயலை ஏற்றுக்கொண்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு, அக்டோபர் 8 ஆம் தேதி அவருக்கு எட்டு ஆண்டுகள், மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிறுவனின் அடையாளத்தைக் கட்டிக்காக்கும் பொருட்டு, ஆடவரின் பெயரை வெளியிட தடை விதிக்கப்பட்டது.
சிறுவனின் குடும்பத்தினரை ஆந்த ஆடவர் அறிந்திருந்தார் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் சுனில் நாயரும் ஜூன் கியானும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
2023 மார்ச் 7ஆம் தேதி, சிறுவன் பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது அவரிடம் வீட்டுச் சாவி இல்லை. அப்போது அவர் கழிவறைக்குச் செல்லவிருந்ததால், அதே தளத்தில் உள்ள குற்றவாளியின் வீட்டின் கதவைத் தட்டினார்.
சிறுவனை உள்ளே அனுமதித்தார் ஆடவர். பின்னர் இருவரும் வீட்டில் இருந்த சோஃபா நாற்காலியில் அமர்ந்து, சிறுவனின் தந்தை வருவதற்குக் காத்திருந்தனர். மாலை 5 மணியளவில், அந்த ஆடவர் சிறுவனை தனது அந்தரங்க உறுப்பைத் தொடுமாறு கேட்டதுடன், பாலியல் செயலில் ஈடுபட உட்படுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
பின்னர் இருவரும் பாலியல் செயலில் ஈடுபட்டனர். பிறகு, சிறுவனின் சகோதரர் அங்கு வந்து சிறுவனை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
சிறுவனுக்குக் கிட்டத்தட்ட 12 வயது இருக்கும் என்று அந்த ஆடவர் அறிந்திருந்தார் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.


