மனநிலை பாதிப்படையும் நிலையில் நம் சார்பில் முடிவெடுக்க மற்றொருவருக்கு அதிகாரம் வழங்க வழிவகுக்கும் ஒரு முக்கிய ஆவணம் நீண்டகால அதிகாரப் பத்திரம்.
பொதுமக்கள் நீண்டகால அதிகாரப் பத்திரத்துக்குப் பதிவு செய்ய உதவும் வகையில் இந்து அறக்கட்டளை வாரியத்தின் சமூக சேவை குழு சனிக்கிழமை (மார்ச் 25ஆம் தேதி) நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் காலை 9 மணி தொடங்கும் இந்நிகழ்ச்சி 30 நிமிடங்களுக்கு நீடிக்கும்.
நீண்டகால அதிகாரப் பத்திரத்தை பதிவு செய்ய அரசாங்கம் பொதுக் காப்பாளர் அலுவலகத்தை அமைத்துள்ளது. மார்ச் 31ஆம் தேதி வரை $75 கட்டணம் வழங்காமல் சிங்கப்பூர் குடிமக்கள் இந்த பத்திரத்துக்குப் பதிவு செய்யலாம்.
அலுவலகத்தின் புது இணையத்தளம் மூலம் பதிவு செய்யும் வசதியும் 2022ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி முதல் தொடங்கியது.
இணையத்தளத்தை இங்கு நாடலாம்: https://opg-eservice.msf.gov.sg/