வேலை மோசடி: $17.6 மில்லியன் இழப்பு; 1,000க்கும் அதிகமானோர் ஏமாற்றம்

சிங்கப்பூரில் வேலைத் தொடர்பான மோசடிகளில் ஏறக்குறைய 1,013 பேர் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அதன்மூலம் குறைந்தது 17.6 மில்லியன் வெள்ளியை இழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாட்ஸ்சப், டெலிகிராம் போன்ற செயலிகள் வழி மோசடியாளர்கள் பொதுமக்களைத் தொடர்புகொண்டு மோசடிச் செயல்களில் ஈடுபடுவதாகக் காவல்துறை எச்சரித்தது.

ஆய்வு ஒன்றுக்குக் கணக்கெடுப்பு (Survey) எடுப்பதுதான் வேலை என்று கூறி மக்களிடம் வேலை வாங்கிவிட்டு ஊதியம் தராமல் மோசடியாளர்கள் ஏமாற்றுகின்றனர்.

நூதனமுறையில் மக்கள் ஏமாறாமல் இருக்க ஸ்கேம்‌ஷீல்ட் செயலியையும், வங்கி மற்றும் சமூக ஊடக கணக்குகளை இரு முறை பாதுகாப்பு கட்டமைப்பு மூலம் வலுப்படுத்த வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தினர். 

வங்கி கணக்குகளில் பணம் மாற்றுவதற்கான ஒருநாள் வரம்பையும் மக்கள் நிரப்பி இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

மோசடி தொடர்பான உதவிகளுக்கு www.scamalert.sg என்ற இணையப் பக்கத்தை நாடலாம் அல்லது 1800-722-6688 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். 

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!