வரிசையில் வராமல் ஏமாற்றிய மலேசிய கார் ஓட்டுநருக்கு அனுமதி மறுப்பு

சென்ற சனிக்கிழமை மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட வாகனத்தை ஓட்டி வந்த ஆடவர் ஒருவர் வரிசையில் காத்திருக்காமல் லாரி, பேருந்துகளுக்கான தடத்தைப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து சிங்கப்பூருக்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

அச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவிவருகிறது. 

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்லும் இரண்டு தடங்களிலும் வாகன நெரிசலைக் காட்டும் அக்காணொளியில் அந்த காருக்குப் பின்னால் பேருந்து ஒன்று செல்வதும் தெரிகிறது. 

துணைக்காவல் படை அதிகாரிகள் இருவர் காரை நிறுத்துவதும் அவர்களில் ஒருவர் சற்றே நகர்ந்தபோது அந்த கார் விரைந்து சென்றதையும் காணொளி காட்டுகிறது. 

துணைக்காவல் படை அதிகாரி காரை திருப்பி மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழையச் சொன்னதை மீறி அதன் ஓட்டுநர் அபாயகரமாக அதை ஓட்டிச் சென்றதாக குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!