வாகனம் ஓட்டும் உரிமம் இல்லாமல் காரை ஓட்டி விளக்குக் கம்பத்தில் மோதியவர் கைது

யீ‌ஷூன் வட்டாரத்தில் வாகனம் ஓட்டும் உரிமம் இல்லாமல் காரை ஓட்டி  சாலையோரத்தில் இருந்த விளக்குக் கம்பம் மீது மோதிய 31 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஆடவர் கார் உரிமையாளரின் அனுமதி இல்லாமல் காரை ஓட்டியதாகவும் விசாரணையில் தெரியவந்தது. 

சம்பவம் குறித்து திங்கட்கிழமை (ஜூன் 5) இரவு 7:30 மணி வாக்கில் தங்களுக்கு தகவல் வந்ததாக காவல்துறைத் தெரிவித்தது.

அதைத்தொடர்ந்து விபத்து நடந்த இடமான யீ‌ஷூன் அவென்யூ 6 நோக்கிச் செல்லும் யீ‌ஷூன் அவென்யூ 1க்கு அதிகாரிகள் விரைந்ததாகக் காவல்துறை கூறியது.

விபத்தில் வேன் ஒன்றும் சிக்கியது. வேன் ஓட்டுநர் விசாரணைக்கு உதவிவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  

விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப்படை அதிகாரிகள் கூறினர். 

விபத்து குறித்த படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. அதில் காரின் முன்பகுதி சேதமடைந்திருந்தது. விளக்குக் கம்பம் சாய்ந்திருந்தது. விபத்துக்குள்ளான காரை இழுத்து செல்லும் வாகனமும் அதில் இருந்தது. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!