போதைப்பொருள் கடத்தல்: சந்தேக நபர் கைது

போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் புரிந்ததாகவும் காவல்துறை அதிகாரி ஒருவரைத் தாக்கியதாகவும் சந்தேகத்தின் பேரில் 40 வயது ஆடவர் ஒருவரைக் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமையன்று கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பில் நவம்பர் 30ஆம் தேதி இரவு 11.15 மணியளவில் புளோக் 433A புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 8ல் இருந்து உதவி வேண்டி காவல்துறைக்கு அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது.

அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தபோது ஆடவர் ஒருவர் தன்னைத்தானே அடித்துக்கொண்டு அலறி அழுவதைக் காண முடிந்ததாகவும் காவல்துறையினர் அவரை நெருங்கியபோது, அந்த ஆடவர் முரட்டுத்தனமாகக் கத்திக்கொண்டு காவல்துறை அதிகாரி ஒருவரைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், அரசு ஊழியர் தனது கடமையைச் செய்யவிடாமல் தடுத்து அவரைத் தாக்கிக் காயப்படுத்திய குற்றத்திற்காகவும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகவும் ஆடவர் கைது செய்யப்பட்டார்.

காயமுற்ற சந்தேக நபர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குச் கொண்டு செல்லப்பட்டார் என்றும் தாக்குதலுக்கு உள்ளான 21 வயது காவல்துறை அதிகாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அறியப்படுகிறது.

இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!